Friday, May 7, 2010
அன்னையர் தினம்
தாயைப் போற்றும்
தமிழ்ச் சமூகத்திற்குச்
சொல்லித் தந்தது
எவன்?
"அம்மாவுக்கு
ஒரு தினம்" என்று.
அவளுக்காகத் தான்
"அனு(ணு) தினமும்".
Wednesday, May 5, 2010
விழி மொழி.
உன்
விழி மொழியின்
பின்னே
திரண்டு நிற்கும்
சொற்களின்
அடர்த்தியையும்,
வலிமையையும்
என்ன சொல்லிப்
புரிய வைப்பது?
தெளிவுரை
பதவுரை
பொழிப்புரை
... ... ...
... ... ...
இப்படியே
பழக்கப்பட்ட
இவர்களுக்கு
அவசியம்
அருள்வாய்
உன் இதழுரை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)