Tuesday, February 28, 2012

அதிரும் உயிர்.





• வேட்டுவனின்
கவணிலிருந்து

விடுபட்ட

குறுங்கல்

ஊதிச் செல்கிறது

 விதியின் துயரத்தை....


• சிறகதிரப்

பறந்து செல்லும்

பறவையின்

ஒற்றை இறகு

காற்றில் அலைந்தபடி

சொல்லித் திரிகிறது...

இருத்தலின்

அவசியத்தை......

No comments:

Post a Comment