Wednesday, May 5, 2010

விழி மொழி.




உன்
விழி மொழியின்
பின்னே
திரண்டு நிற்கும்
சொற்களின்

அடர்த்தியையும்,
வலிமையையும்
என்ன சொல்லிப்
புரிய வைப்பது?

தெளிவுரை
பதவுரை
பொழிப்புரை
... ... ...
... ... ...

இப்படியே
பழக்கப்பட்ட
இவர்களுக்கு

அவசியம்
அருள்வாய்
உன் இதழுரை.

1 comment:

  1. தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

    PLEASE CLICK THE LINK BELOW

    நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அங்கீகாரம்



    GIVE YOUR SUPPORT.

    ReplyDelete