21) போக்குவரத்து
நெரிசல்மிக்க
அந்தச் சாலையோரத்தில்
நாம்
பேசிக்கொண்டிருந்தபொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.
**********
22) உனக்கான பதில்களை
என்னிடமிருந்து நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிறபோதெல்லலாம்
தலைமுறைகளைத்
தாண்டிய
நம் பாட்டிகளின்
உறைந்து கிடக்கும்
மௌனங்கள் அனைத்தையும்
நீ உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான் கருதுகிறேன்.
**********
23) எதைப் பற்றித்தான்
நாம்
பேசிக்கொள்ளவில்லை.
காதல் காமம்
குல்சாரி
ஆழிப்பேரலை
பெரியார்
அகிரா குரசோவா
புல்லாங்குழுல்
காற்றுள் மிதக்கும்
நம் உரையாடல்களை
மீட்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா?.
**********
24)சேர்ந்து நிழற்படம்
எடுத்துக்கொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாகச்
சொல்லிக்கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
துணைவியிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச் சிரிக்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்.
**********
25) பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்.
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.
No comments:
Post a Comment