Thursday, April 29, 2010

மழலைச் சாரல் :)



கொதிக்கும்
தார்ச் சாலை.

வியர்வையின்
புழுக்கத்தில்
தொப்பலாய் நனைந்து
விசனத்தோடு
போக்குவரத்துச்
சமிக்ஞைக்காகக்
காத்து நின்ற
கணம்.

கடந்து சென்ற
பேருந்தில்
கை நீட்டியவாறே
சிரித்துச் செல்கிறது
குழந்தை.

மனதில் பட்டுத்
தெளி(றி)த்தது
மழலைச் சாரல்.

No comments:

Post a Comment