Wednesday, April 14, 2010

பங்கு வாங்கலியோ பங்கு....1



ஒவ்வொரு நாளும் நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். BSE. NSE, Nikei, Dow Jones இவ்வாறு பல குறியீட்டுச் சொற்களை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது? என்பன போன்ற வினாக்கள் தொட்டுத் தொடரும் நம் மனத்துள்.

பொருளாதாரம் பற்றிப் பேசப் போனால் பங்கு வர்த்தகம் பற்றிப் பேசாமல் அது முழுமையடையாது. நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொகாள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது என்பது அடுத்து எழும் வினா. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஓரளவு விடையளிக்கிறது இந்தத் தொடர் கட்டுரை.

பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளியலுக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் கருவி. அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றனர். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். பங்கு வர்த்தகத்தின் இந்த நடைமுறை பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் விரிக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை விரியும் போது நண்பர்கள், சுற்று வட்டம் இப்படிக் கடன் வட்டமும் விரியும்.

அப்ப நாம பணத்தை மத்தவங்க கிட்ட இருந்து வாங்கணும். அதைக் கடன்னு கொடுக்க மாட்டாங்க. அதனால நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தர வேண்டிய நிலை வரும். அதுதான் ஷேர் - அதாவது (Sharing In Profit).

நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகப் போகிறது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு Share எனப்படும்.



பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பர்யம் உடையது. அண்மையத் தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை இன்னும் வளப்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட அந்த வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.

முதன் முதலில் பங்கு கொடுத்தது ஹாலந்துல டச்சு ஈஸ்ட் இன்டியா கம்பெனி (Dutch East India Company). அது நடந்தது 1600 ல். அவங்க தான் முதன் முதலாக பங்கு வர்த்தகத்தை அறிமுகம் செய்தது.

இப்ப பங்கு வந்துடுச்சு. நான் அதைக் கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் எனக்குப் பணத் தேவை வருது. அப்ப நான் அதை விற்கணும். அதற்கு ஒரு நிறுவனம் இருக்கணும். இல்லாட்டி விற்பனை செய்வது கஷ்டம். அப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க. இந்தப் பங்குப் பரிவர்த்தனை செய்வதற்காகத் தான் பங்குச் சந்தையை ஆரம்பிச்சாங்க. முதல் பங்குச் சந்தை ஆரம்பிச்சதும் ஹாலந்துல தான்.

தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது? அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா? தங்கள் முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம்? இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.

அதாவது வாங்குறவங்களுக்கும், விக்கிறவங்களுக்கும் இடையில் அவங்க தரகு வேலை பண்ணுவாங்க. அப்புறம் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம ஒரே ஒரு இடத்துல வைச்சு செய்வோம் அப்படின்னு ஒரு பொது இடத்துக்கு வந்தாங்க. அது தான் பங்குச் சந்தை. தற்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 70 பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதுக்கப்புறம் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிச்சாங்க. உதாரணமாக அமெரிக்காவில் (SEC – Securities & Exchange Commission) சிங்கப்பூரில் (Monitory Authority Of Singapore – MAS) இந்தியாவில் SEBI – Security and Exchange Board Of India.இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளைத் தோற்றுவித்துக் கொண்டன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எப்போது தொடங்கப்பட்டன. அவற்றால் பொதுமக்களுக்கு என்ன பயன்?

(கூறு போடுவோம்)

7 comments:

  1. //good post
    unmaivrumbi,
    Mumbai.

    //

    பாராட்டிய மெய்யான அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி bogy.

    ReplyDelete
  3. ஆக மிக அவசியமான பதிவு.

    தொடருங்கள் சார்.

    ReplyDelete
  4. வேர்டு வெரிஃபிகேசனை எடுத்து விடுங்கள் சார். கமெண்ட் இட கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. ஆதரவுக்கு நன்றி அக்பர். வார்த்தைச் சோதனை இனி அவசியமல்ல. நீக்கி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.
    யூனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி இங்கே சென்று பார்க்கவும் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html

    ReplyDelete