Thursday, April 22, 2010

சிறகு முளைத்த சொற்கள்.



உன்னை விட
அழகில்லை
உன் கையெழுத்து.

பின்னே எப்படியாம்?

கோழி கிறுக்கியதைப் போல.


"அவை
சிறகு முளைத்த
சொற்கள்" என்றாள்
சினந்த முகத்தோடு
சிணுங்கியவாறே.

அட ஆமா!

என் ஆச்சர்ய
விழிகளுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.


2 comments:

  1. //"அவை
    சிறகு முளைத்த
    சொற்கள்" என்றாள்
    சினந்த முகத்தோடு
    சிணுங்கியவாறே.
    //

    அழகான வரிகள்

    நல்ல கவிதை

    ReplyDelete
  2. // அழகான வரிகள்

    நல்ல கவிதை

    //

    வருகை தந்தது உவகை.
    தொடர்ந்து இணைந்திருங்கள்
    வேலு ஜி.

    ReplyDelete