Friday, December 2, 2011

இணையில்லா இறைவா!



இணையில்லா
இறைவா!

அன்புக்கு
நீயே ஆதாரம்.

அசதியின்
அவசரத்தில்
அதை மறந்தால்
வாழ்வே சேதாரம்.

கருணைக்கு
நீயே மூலாதாரம்.

அந்த
நம்பிக்கையே
இகபர வாழ்வின்
ஜீவாதாரம்.

மண்ணில்
மன்பதைகளை
மாண்புறக் காப்பவனே!

இமைப் பொழுதும்
எனை
என் பொறுப்பில்
சாட்டி விடாதே!

கார்மேகக்
கருணையாளனே!


அசத்தியம் முறித்து
சத்தியம் வெல்ல
நீயே
கணை.

உன்
கனி விழிப்
பார்வையின்
கண்ணியில்
என்னையும்
பிணை.

உன் வழி
வாழும்
நல்லடியார் குழுவில்
என்னையும்
இணை.

இகமதில்
அகமதில்
முஹம்மதின்
துணையோடு
கதிபெற
இப்போதும்
முப்போதும்
எப்போதும்
நீயே
துணை.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இகமதில் அகமதில் முஹம்மதின் துணையோடு கதி பெற இப்போதும் முப்போதும் எப்போதும் நீயே துணை.

    இந்த வரிகளில் மின்னும் ஆன்மீக ரகசியம் ஆழமானது.அர்த்தமுள்ளது.

    ஏகத்துவமும் தூதுத்துவமும் விளக்கும் எழுத்துப் புதையல்

    அருமை சதக்.

    ReplyDelete