Thursday, October 9, 2008

மாயவலை



மாயவலை

நான்

வீதி வரும்

வேளை பார்த்து

வாசலில்

காத்திருப்பாய்.

ஏய்!

அங்க பாரு

உன் ஆளு.

கிசுகிசுப்பாள்

தோழி

உன் காதோரம்.

என் காலடி

ஓசைக்கு

உன் விழியீர்ப்பைக்

கொடுத்து விட்டு

ஜடையை எடுத்து

ஒயிலாய்ப் பின்னுவாய்

ஒண்ணுமறியா

அப்பாவி போல்.

அதை விட

வலிமையான

வலை

உண்டோ உலகில்?

No comments:

Post a Comment