Tuesday, October 21, 2008

மழை நன்றி



மழை நன்றி.


குடை மறந்த
மழை நாள்.

நனைந்தபடியே
நுழைந்தேன்
இல்லத்துள்.

என்ன நீங்க
கொஞ்சம் நின்னு
வரக்கூடாதா?
கேட்டாள் மனைவி.

சேலைத் தலைப்பால்
துவட்டினாள்
அம்மா.

2 comments:

  1. வருகைக்கும்
    மறுமொழிக்கும்
    அன்பின் ஆழிய நன்றி.

    ReplyDelete